ராமேசுவரம் | வேதாளை கடற்கரையில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 650 கிலோ கடல் அட்டைகள் மண்டபத்தில் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளுடன் மெரைன் போலீஸார் மற்றும் வனத்துறையினர். படம்: எல்.பாலச்சந்தர்
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளுடன் மெரைன் போலீஸார் மற்றும் வனத்துறையினர். படம்: எல்.பாலச்சந்தர்
Updated on
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் அருகே வேதாளை யில் 650 கிலோ கடல் அட்டைகளை மெரைன் போலீஸார் மற்றும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வேதாளை கடற்கரை யிலிருந்து தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக மண்டபம் மெரைன் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அப்பகுதி யில் மெரைன் போலீஸாரும், வனத்துறையினரும் ரோந்து சென்றனர்.

காவல்துறையினரை கண்டதும் கடத்தல்காரர்கள் 20-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பெட்டி மற்றும் ஜெனரேட்டர் ஆகியவற்றை கடற்கரை தோப்பில் விட்டுவிட்டு தப்பினர். பிளாஸ்டிக் பெட்டிகளில் 650 கிலோ பதப்படுத்தப்பட்ட நிலையில் கடல் அட்டைகள் இருந்தன. அதை பறிமுதல் செய்த போலீஸார், மண்டபம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

மெரைன் போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக அங்கு பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. கடல் அட்டைகள் வைக்கப்பட்டிருந்த தோப்பின் உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்து காவல்துறையினரும், வனத்துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in