

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் பழனி(65).
பூசாரியான இவரிடம், தனது 15 வயது மகளுக்கு இருந்து வந்த வயிற்று வலியை சரி செய்யுமாறு கூறி, அவரது தாயார் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, சிறுமிக்கு சிறப்பு பூஜை நடத்த வேண்டுமென கூறியதோடு, பழனி தனது வீட்டில் அந்தச் சிறுமியை தனிமையில் அடைத்து வைத்து பூஜை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
3 மாதங்களுக்குப் பிறகு சிறுமி கர்ப்பமானது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பழனியை, கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் நேற்று கைது செய்தனர்.