Published : 03 Jun 2022 06:32 AM
Last Updated : 03 Jun 2022 06:32 AM

செங்கை ரயில் நிலையத்தில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்

செங்கல்பட்டு

ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து செங்கல்பட்டுக்கு ரயில்மூலம் கடத்தப்பட்ட 10 கிலோ கஞ்சா நேற்று செங்கல்பட்டு பகுதியில் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம் காக்கி நாடாவில் இருந்து செங்கல்பட்டு வரை தினசரி விரைவு ரயில் வந்து செல்கிறது.

இந்த ரயில் நேற்று செங்கல்பட்டு ரயில் நிலையத்தை வந்தடைந்தபோது ரயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக ரயில்வேபாதுகாப்பு போலீஸார்சோதனையிட்டனர். உதவி ஆய்வாளர் ராமதாஸ் தலைமையில் இந்த சோதனை நடந்தபோது கேட்பாரற்ற நிலையில் இரண்டு பைகள் இருந்தன.அதனை திறந்து பார்த்தபோது அதில் 5 பண்டல்களாக பேக்கிங் செய்த நிலையில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.

போலீஸார் தீவிர விசாரணை

இதனைத் தொடர்ந்து இந்த கஞ்சா மீட்கப்பட்டு போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x