ஆவடி | தொழிலாளி கொலை: உறவினர் கைது

ஆவடி | தொழிலாளி கொலை: உறவினர் கைது
Updated on
1 min read

ஆவடி: ஆவடி அருகே மதுஅருந்த பணம் கேட்ட தகராறில் கூலி தொழிலாளியை கொலை செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே திருமுல்லைவாயில் - வெங்கடேஸ்வரா நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தன் மகன் விக்னேஷ்வரன் மற்றும் உறவினரான செல்வராஜ் என்கிற ஏழுமலை ஆகியோருடன் வசித்து வந்தார்.

உமாமகேஸ்வரியும் ஏழுமலையும் கூலி வேலைக்குச் சென்று வந்தனர். இதில் ஏழுமலை வாங்கும் ஊதியத்தை உமாமகேஸ்வரி வாங்கி வைத்துக் கொண்டு, அவரின் தேவைக்கு பணம் தருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு,ஏற்கெனவே குடித்துவிட்டு வந்த ஏழுமலை மீண்டும் மது அருந்த பணம் கேட்டு, உமாமகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த உமாமகேஸ்வரியின் மகன் விக்னேஷ்வரன், ஏழுமலையை தள்ளிவிட்டதாகத் தெரிகிறது. இதில், நெற்றி மற்றும் பின் தலையில் படுகாயமடைந்த ஏழுமலை உயிரிழந்தார்.

இதுகுறித்து, தகவலறிந்த திருமுல்லைவாயில் போலீஸார், சம்பவ இடம் விரைந்து உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிந்து விக்னேஷ்வரனை கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in