ஈரோடு | சொத்துத் தகராறில் விவசாயி கொலை: மகனிடம் போலீஸார் விசாரணை

ஈரோடு | சொத்துத் தகராறில் விவசாயி கொலை: மகனிடம் போலீஸார் விசாரணை
Updated on
1 min read

ஈரோடு: ஈரோடு அருகே சொத்துத் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்டது தொடர்பாக மகனிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு திண்டல் வேப்பம்பாளையம் பிரிவைச் சேர்ந்தவர் பழனிசாமி (68). விவசாயி. இவரது மனைவி ருக்குமணி. இவர்களுக்கு பிரியதர்ஷினி என்ற மகளும், ரவிகுமார்(37) என்ற மகனும் உள்ளனர். பொறியியல் பட்டதாரியான ரவிகுமார், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில், தன் தந்தையிடம் சொத்துக்களை தன் பெயரில் எழுதி வைக்குமாறு, கடந்த சில நாட்களாக ரவிகுமார் வலியுறுத்தி வந்துள்ளார். அதற்கு பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனிசாமியிடம், ரவிகுமார் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பழனிசாமி உயிரிழந்தார்.

பழனிசாமியின் மனைவி ருக்மணிக்கு நள்ளிரவில் இது தெரியவந்ததையடுத்து, ஈரோடு தாலுகா போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். டிஎஸ்பி ஆனந்தகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயா, சோமசுந்தரம் உள்ளிட்ட போலீஸார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். பழனிசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பழனிசாமியின் மகன் ரவிகுமாரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in