சேலம்: போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

சேலம்: போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது
Updated on
1 min read

சேலம்: 2-வது மனைவியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

ஓமலூர் அருகே உள்ள பனங்காட்டைச் சேர்ந்தவர் மூட்டை தூக்கும் தொழிலாளி குமரவேல் (52). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் சேலத்தைச் சேர்ந்த கணவரை இழந்த 15 வயது மகளுடன் வசித்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் 2-வது மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில் அவரது 15 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். புகாரின்பேரில் சேலம் அம்மாப்பேட்டை போலீஸார் குமரவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in