கடலூர்: காதலிக்கு செல்போன் வாங்க மூதாட்டி கொலை - கல்லூரி மாணவர் கைது

கடலூர்: காதலிக்கு செல்போன் வாங்க மூதாட்டி கொலை - கல்லூரி மாணவர் கைது
Updated on
1 min read

கடலூர் மாவட்டம் வேப்பூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பாலகவுண்டர் மனைவி பட்டாத்தாள் (75). இவர் வாடகை வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில், அருகில் வசிக்கும் அவரது மகள் அவ்வப்போது வந்து செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 6-ம் தேதி தாயை பார்க்க வந்தபோது, பட்டத்தாள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகியி ருந்தன.

புகாரின் பேரில் வேப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்துநடத்திய விசாரணையில், மூதாட்டிஅணிந்திருந்த நகை அதே பகுதி யில் உள்ள அடகுக் கடையில் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு பிடித்த போலீஸார், அந்த நகையைஅடகு வைத்த நபரை கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறிந்தபோது, அவர் மூதாட்டி வீட்டிற்கு அருகாமையில் வசிக்கும் சூர்யா (21) என்பவருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பயிலும் சூர்யாவை நேற்று பிடித்த போலீ ஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, தன் னுடன் பயிலும் மாணவி ஒருவரை காதலிப்பதாகவும், அவரது பிறந்தநாளுக்கு செல்போன் பரிசு வழங்குவதற்காக பணமின்றி தவித்தபோது, தனியாகவசித்து வந்த மூதாட்டி அணிந்தி ருந்த நகையை பறிக்க முடிவு செய்து, அவரை கழுத்து நெரித்துகொலை செய்து, அவர் அணிந்திருந்த நகையை பறித்து அடகுகடையில் வைத்து பணம் பெற்றுசெல்போன் வாங்கிக் கொடுத்ததா கவும், மீதி தொகையை திருச்சியில் தங்குவதற்கு முன்பணமாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித் துள்ளார்.

இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவுசெய்த போலீஸார், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in