சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓட்டுநருக்கு 20 ஆண்டு சிறை - கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

17 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

காவேரிப்பட்டணம் அடுத்த மலையாண்டஹள்ளி செட்டிமாரம் பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (24) ஓட்டுநர், இவர் 17 வயது சிறுமியை கடத்திச் பாலியல் தொந்தரவு செய்ததாக. சிறு மியின் பெற்றோர் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் பிரபாகரனை கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை, கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி தீர்ப்பு அளித்தார்.

அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரபாகரனுக்கு. சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய குற்றத்திற்காக 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனையும், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 5 ஆண்டு சிறை, ரூ. ஆயிரம் அபராதம், கட்டத்தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது. இந்த தண்டனைகளை, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in