உதகை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - தொழிலாளிக்கு 38 ஆண்டுகள் சிறை தண்டனை

உதகை: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - தொழிலாளிக்கு 38 ஆண்டுகள் சிறை தண்டனை

Published on

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பாலவாடி பகுதியைச் சேர்ந்தவர் அப்பாஸ் (52). மாற்றுத்திறனாளியான இவர், கூலி வேலை செய்து வருகிறார். இவர், 2019-ம் ஆண்டு நான்கரை வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கூடலூர் மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து, அப்பாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர். உதகையிலுள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அப்பாஸுக்கு 38 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஆர்.தரன் உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் செந்தில் ஆஜரானார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in