Published : 30 Jan 2022 07:35 AM
Last Updated : 30 Jan 2022 07:35 AM

வேலூர்: 2-வது திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது

வேலூர் அடுத்த கத்தாழம்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (33). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும், இந்துமதி (32) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனைவியை சந்தோஷ்குமார் கொடுமை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால், கணவரை பிரிந்த இந்துமதி, விரிஞ்சிபுரம் அருகேயுள்ள கம்மவார் பாளையம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதற்கிடையில், இந்துமதிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை சந்தோஷ்குமார் ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது.

இந்த தகவலை மிக தாமதமாக தெரிந்துகொண்ட இந்துமதி அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயாவிடம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு புகார் மனு கொடுத்துள்ளார்.

இந்த மனுவின் மீது உடனடியாக விசாரித்து நட வடிக்கை எடுக்குமாறு வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு டிஐஜி ஆனி விஜயா உத்தரவிட்டார். அதன் பேரில், வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிந்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

வேலூர் சரகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து டிஐஜி அலுவலகத்தில் நேரடியாக அல்லது 82201-66100 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டும் வாட்ஸ்-அப் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டிஐஜி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x