Published : 12 Jan 2022 10:15 AM
Last Updated : 12 Jan 2022 10:15 AM

செய்யாறு அருகே விவசாயியை கடத்திய காவலர் கைது

தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் வசிப்பவர் விவசாயி திருமலை(50). இவருக்கும், அதே கிராமத்தில் வசிக்கும் ராஜாராம்(36) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளாக முன் விரோதம் உள்ளது.

இந்நிலையில், மகாஜனம் பாக்கம்–பெரும்புலிமேடு சாலையில் திருமலை நேற்று முன்தினம் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது, காரில் வந்த ராஜாராம் உள்ளிட்ட 5 பேர் அவரை கடத்தி சென்ற தாக கூறப்படுகிறது.

பின்னர், அவர்களது பிடியில் இருந்து திருமலை தப்பித்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தூசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராஜாராமை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட ராஜாராம், செய்யாறு காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x