Published : 22 Dec 2021 01:30 PM
Last Updated : 22 Dec 2021 01:30 PM

2 போக்ஸோ வழக்குகளில் சிவசங்கர் பாபா ஆஜர்: ஜன.4-ல் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு

செங்கல்பட்டு

இரு போக்ஸோ வழக்குகளில் சிவசங்கர் பாபா நேற்று செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 4-ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில்  சுஷில் ஹரி இன்டர்நே‌ஷனல் பள்ளியில் படித்தபோது சிவசங்கர் பாபா தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது இதுவரை 8 போக்ஸோ மற்றும் 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சிவசங்கர்பாபாவை 2 போக்ஸோ வழக்குகளில் நேற்று செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினார்கள்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி அவரை மீண்டும் சிறையில் அடைக்கவும் வரும் ஜனவரி மாதம் 4-ம்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x