Last Updated : 14 Dec, 2021 03:08 PM

 

Published : 14 Dec 2021 03:08 PM
Last Updated : 14 Dec 2021 03:08 PM

பரங்கிப்பேட்டை அருகே திருநங்கை வெட்டிக்கொலை: போலீஸார் விசாரணை 

திருநங்கை பனி மலர்

கடலூர்

பரங்கிப்பேட்டை அருகே பி.முட்லூர் பகுதியில் திருநங்கை வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி அருகே பொன் நகர் சாமிசெட்டிபட்டி பகுதியில் உள்ள போலன நல்லம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பனிமலர் (30). திருநங்கையான இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதிக்கு வந்தார். பின்னர் அவர் சிதம்பரம் அருகே உள்ள மணலூரில் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று (டிச.14) காலை பரங்கிப்பேட்டை அருகே உள்ள பி. முட்லூர் பகுதியில் உள்ள தைலக்காட்டில் வெட்டுக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.

அவரது முகம், உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. இந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதை பார்த்து இது குறித்து பரங்கிப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தந்தனர். இன்ஸ்பெக்டர் தேவி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பனிமலரை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x