ஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில்  கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது

ஆபாசப் படம் பதிவேற்றியதாக முதன்முதலில்  கைதான கிறிஸ்டோபர் குண்டர் சட்டத்தில் கைது
Updated on
1 min read

நீதிமன்றங்களும் அதைச் சுட்டிக்காட்டின. ஆபாச வலைதளங்களில் குறிப்பாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் காணொலிகள் பரப்பப்படுவதும், அதற்கென பெரிய அளவில் மறைமுகச் சந்தை இருப்பதும், இதன் மூலம் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதும் பெரிய பிரச்சினையாக மாறி வந்தது.

ஆபாச வலைதளங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியர்கள் அதிகம் என்கிற ஆய்வு முடிவும், தமிழகம் அதில் முன்னேறிய இடத்தில் உள்ளது என்கிற அதிர்ச்சி செய்தியும் வெளியானது. மத்திய அரசு 120-க்கும் மேற்பட்ட ஆபாச வலைதளங்களை முடக்கியது. குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படங்களைப் பார்ப்பதோ, தரவிறக்கம் செய்வதோ, அதை மற்றவர்களுக்குப் பகிர்வதோ கடுமையான குற்றமாகும்.

இவ்வாறு ஆபாசப் படம் பார்த்தவர்களின் பெரிய பட்டியலை ஐபி முகவரியுடன் அமெரிக்க உளவு அமைப்பு மத்திய அரசுக்கு அனுப்ப, அது தமிழக போலீஸாருக்கும் வந்தது. ஐபி முகவரியை வைத்து அதுபோன்ற செயலில் ஈடுபட்ட நபர்களைக் கண்டறியும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இதில் முதல் கைதாக குழந்தைகளைக் காட்சிப்படுத்தும் ஆபாசப் படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக திருச்சி காஜாப்பேட்டையைச் சேர்ந்த கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் (42) என்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வீடியோக்களைப் பதிவேற்றியதாக பல ஐ.பி. முகவரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருச்சியில் கைது செய்யப்பட்ட கிறிஸ்டோபர் கடந்த 4 ஆண்டுகளாக 500 பேருக்கும் மேற்பட்டவர்களுக்கு ஆபாசப் படங்களைப் பகிர்ந்துள்ளது தெரியவந்தது.

அவர்மீது போக்சோ, ஐடி ஆக்ட் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் ஆணையர் உத்தரவிட்டதன்பேரில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in