வீடு இடிந்து குழந்தை உட்பட 3 பேர் மரணம்

வீடு இடிந்து குழந்தை உட்பட 3 பேர் மரணம்
Updated on
1 min read

கடலூரில் கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் அடுத்த கம்மியம்பேட்டையில் ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நாராயணன். இவர் அப்பகுதியில் சிறிய பெட்டிக் கடையை நடத்தி வருகிறார்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு, நாராய ணன் தனது வீட்டில் குடும்பத் தினருடன் தூங்கினார்.

கனமழையால் சுவர் இடிந்தது

கனமழையால் நாராயணனின் மண்சுவர் முற்றிலும் நனைந் திருந்ததால், பக்கவாட்டுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த நாராயணன் மனைவி மாலா (40), மகள் மகேஸ்வரி (21), மகேஸ்வரியின் ஒன்றரை வயது குழந்தை தனு ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாப மாக உயிரிழந்தனர்.

3 பேருக்கு தீவிர சிகிச்சை

மேலும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த நாராயணன், அவரது மருமகன் வேல்முருகன், மற்றொரு மகள் ரஞ்சிதா ஆகி யோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர். மூவருக்கும் சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில், வீடு இடிந்து விழுந்து 3 பேர் இறந் திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in