ஆந்திராவிலிருந்து வாங்கி வந்து மாஞ்சா நூல் பட்டம் விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

ரமேஷ்பாபு, ஷேக் அஸ்மா, நசுருதீன்

ரமேஷ்பாபு, ஷேக் அஸ்மா, நசுருதீன்

Updated on
1 min read

சென்னை: ஆந்​தி​ரா​விலிருந்து வாங்கி வந்​து, தடையை மீறி மாஞ்சா நூல் பட்​டம் விற்​பனை செய்த பெண் உட்பட 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். கொருக்​குப்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்த பிர​காஷ் ஜெயின் (67) என்ற முதி​ய​வர் கடந்த 22-ம் தேதி மாதவரத்​திலிருந்து மூலக்​கடை மேம்​பாலம் வழி​யாக இருசக்கர வாக​னத்​தில் சென்று கொண்​டிருந்​தார்.

அப்​போது அங்கு திடீரென அறுந்து வந்த மாஞ்சா நூல் அவரது கழுத்து மற்​றும் உதட்​டில் பட்டு காயத்தை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து அவர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் உடனடி​யாக அனு​ம​திக்​கப்​பட்​டார்.

இந்த விவ​காரம் தொடர்​பாக கொடுங்​கையூர் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து தொடர்ந்து விசா​ரித்து வரு​கின்​றனர். இது ஒரு​புறம் இருக்க தடை செய்​யப்​பட்ட மாஞ்சா நூல் மற்​றும் பட்​டம் விற்​பனை செய்த கொடுங்​கையூரைச் சேர்ந்த ஷேக் அஸ்மா (38), அதே பகு​தி​யைச் சேர்ந்த ரமேஷ்​பாபு (53), மூலக்​கடையைச் சேர்ந்த நசுருதீன் (34) ஆகிய 3 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர்.

அவர்​களிட​மிருந்து 35 பட்​டங்​கள், 5 மாஞ்சா நூல்​கண்​டு​களை பறி​முதல் செய்​யப்​பட்​டன. விசா​ரணை​யில், கைது செய்​யப்​பட்​ட​வர்​கள் ஆந்​தி​ரா​விலிருந்து பட்​டம் மற்​றும் மாஞ்சா நூல்​கண்​டு​களை வாங்கி வந்து சென்​னை​யில் விற்​பனை செய்து வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்து 3 பேரும் சிறை​யில்​ அடைக்​கப்​பட்​டனர்​.

<div class="paragraphs"><p>ரமேஷ்பாபு, ஷேக் அஸ்மா, நசுருதீன் </p></div>
உச்சக்கட்ட 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in