வெலிங்டன் ராணுவக் கல்லூரி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 3 வடமாநிலத்தவர் கைது

வெலிங்டன் ராணுவக் கல்லூரி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 3 வடமாநிலத்தவர் கைது
Updated on
1 min read

குன்னூர்: வெலிங்​டன் ராணுவக் கல்​லூரி தேர்​வில் ஆள்​மாறாட்​டம் செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்​யப்​பட்​டனர்.

நீல​கிரி மாவட்​டம், குன்​னூர் அருகே உள்ள வெலிங்​டன் ராணுவ பயிற்சி கல்​லூரி​யில் கடந்த 3-ம் தேதி எழுத்​தர், தொழில் நுட்​பம் உள்பட 10 பிரிவு​களுக்​கான தேர்வு நடந்​தது. தேர்வு அறை​யில் கண்​காணிப்பு அதி​காரி​கள் நடத்​திய சோதனை​யில், உத்​தரப்​பிரதேசமாநிலம் ஆக்​ராவைச் சேர்ந்த நரேஷ்கு​மார் என்ற இளைஞர் அதே முகத் தோற்​றம் கொண்ட வேறு ஒரு​வருக்​காக வந்​து, ஆள்​மாறாட்​டம் செய்​தது ‘பயோமெட்​ரிக்’ சோதனை​யில் உறு​தி​யானது.

இதே​போல், ஆக்​ராவைச் சேர்ந்த மோஹர் சிங், ரோகி​தாஸ் ஆகியோர் இடம் மாறி அமர்ந்து தேர்வு எழு​தி​யதும், தங்​களுக்​குள் தகவல்​களை பரி​மாறிக்​கொண்​டதும் தெரிய​வந்​தது. இதையடுத்​து, ராணுவ பயிற்சி கல்​லூரி அதி​காரி​கள், வெலிங்​டன் போலீ​ஸில் அளித்த புகாரின்​பேரில், போலீ​ஸார் வழக்​குப்​ப​திந்து மோசடி​யில் ஈடு​பட்ட மூவரை​யும் கைது செய்​து சிறை​யில் அடைத்​தனர்​.

வெலிங்டன் ராணுவக் கல்லூரி தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த 3 வடமாநிலத்தவர் கைது
"ஊழல் செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது" - அமைச்சர் நிர்மல் குமார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in