திருப்பூர் - காங்கயத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: போலீஸ் விசாரணை

திருப்பூர் - காங்கயத்தில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: போலீஸ் விசாரணை
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, தனது ஆண் நண்பரான 16 வயது சிறுவனுடன் நேற்று காங்கயம் திருப்பூர் சாலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் குளிக்க சென்றார்.

அங்கு வந்த காங்கயம் வாய்க்கால்மேட்டை சேர்ந்த 45 வயதுடைய நபர், இருவருக்கும் மது கொடுத்ததாக கூறப்படுகிறது. போதையில் சுய நினைவை இழந்த சிறுமியிடம் அந்நபர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் காங்கயம் போலீஸார் விரைந்து வந்து 3 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

சிறுவன், சிறுமியை காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காங்கயம் அனைத்து மகளிர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in