மதுரையில் குடும்ப பிரச்சினை காரணமாக இரு பெண் குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை முயற்சி

மதுரையில் குடும்ப பிரச்சினை காரணமாக இரு பெண் குழந்தைகளை கொன்று தந்தை தூக்கிட்டு தற்கொலை முயற்சி
Updated on
1 min read

மதுரை: மதுரையில் குடும்பப் பிரச்சினையில் 2 பெண் குழந்தைகளை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை, தானும் தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை யாகப்பா நகரில் உள்ள பாலாஜி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சேதுபதி(35). பெயின்ட்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி, மகள்கள் ரக்‌சனா(7), ரக்சிதா (5). கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் கணவருடன் கோபித்துக் கொண்ட ராஜேஸ்வரி, தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நிலையில் இருந்த சேதுபதி, நேற்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தனது 2 குழந்தைகளின் வாயில் விஷத்தை ஊற்றி, தானும் குடித்துள்ளார்.

மேலும், மயங்கிய நிலையில் இருந்த 2 குழந்தைகளையும் கத்தியால் குத்தியும், கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். பின்னர், தானும் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்து வந்த அண்ணா நகர் போலீஸார், தற்கொலைக்கு முயற்சித்த சேதுபதியை மீட்டு, அரசு ராஜாஜிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இரு குழந்தைகளின் உடல்களையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசுமருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, சேதுபதியின் மனைவியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in