Published : 06 Jun 2024 05:23 AM
Last Updated : 06 Jun 2024 05:23 AM

நியோ மேக்ஸ் மோசடி வழக்கு: சிவகங்கையை சேர்ந்த முக்கிய நபர் கைது

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் சிவகங்கையைச் சேர்ந்த முக்கிய நபரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மதுரையை மையமாகக் கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள், முதலீட்டாளர்களிடம் மோசடி செய்ததாக மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸில் புகார்கள் அளிக்கப்பட்டன.

அதன்பேரில், நிர்வாக இயக்கு நர்கள் கமலக்கண்ணன், பால சுப்பிரமணியன், திருச்சி வீரசக்தி உள்ளிட்ட 100-க்கும்மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து, 40-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். தொடர் விசாரணையில், இந்த நிறுவனம் பல நூறு கோடிக்கும் மேல்மோசடி செய்திருப்பது தெரியவந்தது. மதுரை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சிறப்பு டிஎஸ்பி மணிஷா தலைமையிலான தனிப்படையினர், நியோ மேக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளைப் பறிமுதல் செய்து,மோசடியில் தொடர்புடையோரை கைது செய்துவருகின்றனர்.

இந்நிலையில், நியோ மேக்ஸின் துணை நிறுவனமான க்ளைன் மேக்ஸ் நிறுவன இயக்குநரான, சிவகங்கை மாவட்டம் தமறாக்கி அருகிலுள்ள குமாரப்பட்டியைச் சேர்ந்த சம்பத் (42) என்பவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கின் முக்கிய நபரான இவரிடம், நிறுவனத்துக்குச் சொந்தமான சில சொத்து விவரங் களைச் சேகரித்ததாகப் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x