Published : 08 May 2024 06:06 AM
Last Updated : 08 May 2024 06:06 AM

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே லாரி மீது மோதிய கார்.

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர்.

தஞ்சாவூர் மேல வீதியைச் சேர்ந்த குருமூர்த்தி மகன் ஈஸ்வரன்(24), பலராமன் மகன் புவனேஷ் கிருஷ்ணசாமி(19), தேவா மகன் செல்வா(17), கரந்தட்டாங்குடி விசு மகன் சண்முகம்(23) ஆகிய 4 பேரும் பெரம்பலூரில் நடைபெற்ற கோயில் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு நேற்று காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருமானூர் அருகே ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே மாலை 5 மணியளவில் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஜல்லி லாரியின் பின்புறம் கார் வேகமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த 4 பேரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்த திருமானூர் போலீஸார் அங்கு சென்று 4 பேரின் உடல்களை மீட்டு, தஞ்சாவூர் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தை மாவட்ட எஸ்.பி. செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x