தி.நகரில் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறல்; தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

தி.நகரில் 14 வயது மகளிடம் பாலியல் அத்துமீறல்; தந்தைக்கு வாழ்நாள் சிறை தண்டனை: போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை தி.நகர் பகுதியில் 17 வயதுகல்லூரி மாணவர் ஒருவர் கடந்தாண்டு தி.நகர் அனைத்து மகளிர் போலீஸில் அளித்த புகாரில், ‘எனது தாயார் புற்றுநோயால் இறந்து விட்டதால் இன்டீரியர் டெக்கரேஷன் தொழில் செய்யும் தந்தையின் பராமரிப்பில் நானும், 14 வயதாகும் எனது தங்கையும் ஒன்றாக வசித்து வருகிறோம்.

பள்ளிக்கு செல்லும் எனது தங்கையிடம் தந்தை கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறார். நானும், எனது தங்கையும் பலமுறை கண்டித்தும் அவர் கேட்டபாடில்லை. உறவினர்களும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை.

எனவே எனது தங்கையையும், என்னையும் கொடூர தந்தையிடம்இருந்து காப்பாற்ற வேண்டும்’ என கோரியிருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் தந்தையை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது. அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் எஸ். அனிதா ஆஜராகி தாயில்லாத அந்த சிறுமிக்கு தொடர்ச்சியாக அந்த தந்தை இழைத்த பாலியல் கொடுமைகளை ஆதாரத்துடன் நிரூபித்தார்.

அதையடுத்து இந்த வழக்கைவிசாரித்த நீதிபதி எம்.ராஜலட்சுமி, பள்ளிக்கு செல்லும் 14 வயதுமகளிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட தந்தைக்கு வாழ்நாள்சிறை தண்டனை மற்றும் ரூ. 50ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ. 20 லட்சத்தை இழப்பீடாக வழங்கவும், அபராதத் தொகையையும் அந்த சிறுமிக்கே வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in