கரூரில் குடிபோதையில் மகனை கொலை செய்த தந்தை கைது

கைதான சடையப்பன்
கைதான சடையப்பன்
Updated on
1 min read

கரூர்: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மகனை கத்தியால் தொடையில் கிழித்து கொலை செய்த தந்தையை போலீஸார் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் புங்கோடை குளத்துப்பாளையத்தை அடுத்த ஒரம்புபாளையம் காமராஜ் நகரை சேர்ந்தவர் சடையப்பன் (49). இவர் மகன் தேவபிரகாஷ் (21). இருவருக்கும் மது பழக்கம் உள்ளது. இதனால் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இருவரும் குடிபோதையில் இருந்த நிலையில் இருவரிடைய நேற்றிரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

அப்போது சடையப்பன் கத்தியால் தேவபிரகாஷ் தொடையில் கிழித்துள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியேறியுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட தேவபிரகாஷை பரிசோதித்த மருத்துவர் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. வேலாயுதம்பாளையம் போலீஸார் வழக்கு பதிவு செய்து சடையப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in