Published : 08 Jan 2024 06:09 AM
Last Updated : 08 Jan 2024 06:09 AM

சென்னை | வழிப்பறி, திருட்டு வழக்குகளில் 24 பேர் கைது

சென்னை: சென்னையில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களைத் தடுக்க போலீஸார் பல்வேறுநடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த டிச.31-ம்தேதிமுதல் ஜன.6-ம் தேதிவரை 7 நாட்களில் பதிவான செல்போன், செயின் பறிப்பு மற்றும்திருட்டு தொடர்பான 9 வழக்குகளில் தொடர்புடைய 2 சிறுவர்கள் உட்பட 16 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் பைப், ரூ.1000 பணத்தைப் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடந்த 7 நாட்களில் வாகனங்கள் திருடப்பட்டது தொடர்பான 4 வழக்குகளில் தொடர்புடைய சிறுவர் உட்பட 8 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 4 இருசக்கர வாகனங்கள், ஒருஆட்டோவை பறிமுதல் செய்தனர். அந்த வகையில், கடந்த ஒரு வாரத்தில் 24 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x