மேற்குவங்க சோதனை சாவடியில் 2 கிலோ தங்கம் பறிமுதல்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

கொல்கத்தா: இந்தியா – வங்கதேசம் இடையிலான ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி, மேற்கு வங்க மாநிலம் பெட்ரபோல் என்ற இடத்தில் உள்ளது.

இந்நிலையில் வங்கதேசத்தில் இருந்து லாரி ஒன்றில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த சோதனைச் சாவடியில் எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) வீரர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினர்.

இதில் ஒரு லாரியின் கேபின் பகுதியில் 17 துண்டுகளாக மறைத்துவைக்கப்பட்டிருந்த 2 கிலோ, 110 கிராம் எடையுள்ள தங்கத்தை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.1.27 கோடி என கூறப்படுகிறது. இது தொடர்பாக லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரிடிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in