Published : 17 May 2023 04:58 AM
Last Updated : 17 May 2023 04:58 AM

நாட்டில் புதிதாக 656 பேருக்கு கரோனா தொற்று

புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 14,493-ல் இருந்து 13,037 ஆக குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் 3 பேர் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் மொத்த உயிரிழப்பு 5,31,790 ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் இதுவரை 4.49 கோடி பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் சிகிச்சையில் இருப்போர் விகிதம் 0.03% ஆகவும் குணடைந்தோர் விகிதம் 98.79 சதவீதமாகவும் உள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.18 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி பணியில் இதுவரை 220.66 கோடி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x