Published : 30 Mar 2023 08:36 AM
Last Updated : 30 Mar 2023 08:36 AM

ஒரே நாளில்: 2,151 பேருக்கு கரோனா

கோப்புப்படம்

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. நேற்று காலை 8 மணி நேர நிலவரப்படி, நாட்டில் ஒரே நாளில் 2,151 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது, கடந்த 5 மாதங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். இதையடுத்து கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தற்போது 11,903-ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு முன்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் 28-ல் 2,208 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதே ஒரு நாள் அதிகபட்ச பாதிப்பாக கருதப்பட்டது. கரோனா பாதிப்புக்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்ததையடுத்து ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,30,848-ஐ தொட்டுள்ளது. 220.65கோடி டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x