நேற்றை விட அதிகரிப்பு  | தமிழகத்தில் புதிதாக 144  பேருக்கு கரோனா பாதிப்பு

நேற்றை விட அதிகரிப்பு  | தமிழகத்தில் புதிதாக 144  பேருக்கு கரோனா பாதிப்பு

Published on

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 79, பெண்கள் 65 என மொத்தம் 144 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 82 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 56,317 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 17,365 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 79 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 927 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 90 ஆகவும், சென்னையில் 48 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நேற்று கரோனா பாதிப்பு சற்றே குறைந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 3,714 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 26,976 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,513 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 194.27 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in