யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் சயின்ஸ் பிக் ஷன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இருந்து பிரக்ருதி என்ற யானையை அவர் தத்தெடுத்து உள்ளார். இந்த யானைக்கான உணவு மற்றும் பராமரிப்பு செலவுகளை 6 மாதங்களுக்கு அவர் வழங்குவார் என வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிவகார்த்திகேயன் இதற்கு முன் வண்டலூர் பூங்காவிலிருந்து ஒரு சிங்கத்தையும், புலியையும் தத்தெடுத்திருந்தார்.

யானையைத் தத்தெடுத்த சிவகார்த்திகேயன்
ஆளுநர் உரை நடைமுறையை மாற்ற சட்டத் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in