மக்களிடையே வரவேற்பு; அதிகரிக்கும் வசூல் - ‘சிறை’ படக்குழுவினர் மகிழ்ச்சி

மக்களிடையே வரவேற்பு; அதிகரிக்கும் வசூல் - ‘சிறை’ படக்குழுவினர் மகிழ்ச்சி
Updated on
1 min read

மக்களிடையே ‘சிறை’ படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

டிசம்பர் 25-ம் தேதி வெளியான படம் ‘சிறை’. இப்படம் வெளியாவதற்கு முன்பே பல்வேறு முன்னணி இயக்குநர்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் இப்படத்தினை பார்த்துவிட்டு பாராட்டியிருந்தார்கள். முதல் நாள் இப்படம் 1.20 கோடி வசூல் செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து 1 கோடி, 2 கோடி, 2.20 கோடி என தொடர்ச்சியாக வசூல் அதிகரித்து கொண்டே இருந்துள்ளது.

இந்த வசூலால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், முதல் நாளில் சிறிய திரையரங்குகளில் திரையிடப்பட்ட ‘சிறை’ தற்போது பெரிய திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. ஜனவரி 9-ம் தேதி வரை எந்தவொரு பெரிய படமும் வெளியீடு இல்லை என்பதால், இப்படம் அதுவரை திரையிடப்படும். இதனால் இதன் இறுதி வசூல் தயாரிப்பாளருக்கு பங்குத் தொகையாக ரூ.6 கோடி வரை கிடைக்கும் என்கிறார்கள் வர்த்தக நிபுணர்கள்.

சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம்பிரபு, அக்‌ஷய், அனிஷ்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சிறை’. இதன் கதையினை ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் எழுதியுள்ளார். மேலும், இதன் திரைக்கதை மற்றும் வசனத்திலும் சுரேஷ் ராஜகுமாரியுடன் இணைந்து பணிபுரிந்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

மக்களிடையே வரவேற்பு; அதிகரிக்கும் வசூல் - ‘சிறை’ படக்குழுவினர் மகிழ்ச்சி
ஆந்திராவில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: 2 ரயில் பெட்டிகள் எரிந்து சேதம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in