மகாதே​வி: இந்த நாடும் நாட்டு மக்​களும்​..!

மகாதே​வி: இந்த நாடும் நாட்டு மக்​களும்​..!
Updated on
2 min read

விஜய்ம​ராத்தி கவிஞரும் நாடக ஆசிரியரு​மான ராம் கணேஷ் கட்​கரி எழு​திய நாடகங்​களில் புகழ்​பெற்​றது, ‘புண்ய பிர​பாவ்’. இந்​திய நாடக உலகில், கிளாசிக் எனப் போற்​றப்​படும் இந்​நாடகத்​தைத் தழுவி கண்​ண​தாசன் திரைக்​கதை, வசனம் எழுதி உரு​வாக்​கிய படம் ‘மகாதே​வி’. நாயகி​யின் பெயரில் படத்​தின் தலைப்பை வைத்​தனர். இதை சுந்​தர் ராவ் நட்​கர்​னி, தனது ஸ்ரீகணேஷ் மூவி டோன் சார்​பில் தயாரித்து இயக்​கி​னார். நடிகர், ஒளிப்​ப​தி​வாளர், தயாரிப்​பாளர், இயக்​குநர், திரைக்​கதை​யாசி​யர் என பன்​முகத்​தன்மை கொண்ட இந்த மங்​களூர்க்​காரர், மூன்று தீபாவளி கண்ட ‘ஹரி​தாஸ்’ படத்தை இயக்​கிய​வர்.

இதில், எம்​.ஜி.ஆர் நாயக​னாக நடித்​தார். சாவித்​திரி, மகாதே​வி​யாகவும் பி.எஸ்​.வீரப்பா வழக்​கம்​போல வில்​ல​னாக​வும் நடித்​தனர். எம்​.என்​.​ராஜம், ஓ.ஏ.கே. தேவர், கே.ஆர்​.​ராம்​சிங், சந்​திர​பாபு, டி.பி.​முத்​துலட்​சுமி, ஏ.கருணாநி​தி, எஸ்​.எம்​.​திருப்​ப​தி​சாமி, ‘மாஸ்​டர்’ முரளி, கே.என்​.வெங்​கட​ராமன், என்​.எஸ்​.​நா​ராயண பிள்ளை என பலர் நடித்​தனர்.

போரில் வெற்​றி​பெற்​றதும் தோல்​வி அடைந்த மன்​னனை​யும் அவர் மகள் மகாதே​வியை​யும் கைது செய்து தனது நாட்​டுக்கு அழைத்து வரு​கிறான், மகா​ராஜா. அவர்​களின் நற்​குணம் அறிந்​து, சிறை​யில் அடைக்​காமல் தங்​கள் நாட்டு விருந்​தினர்​களாக அரண்​மனை​யில் தங்க வைக்​கிறார். நாட்​டின் மூத்த தளபதி கருணாகரனுக்கு (வீரப்​பா) மகாதேவி மீது காதல் வரு​கிறது. ஆனால், மகாதேவிக்கு இளைய தளப​தி​யான வல்​ல​வன் (எம்​.ஜி.ஆர்) மீது காதல் மயக்​கம்.

இதற்​கிடையே மற்​றொரு தளப​தி​யான ஓ.ஏ.கே.தேவருக்​கும் மகாதேவி மீது ஆசை. சண்​டை​யில் யார் வெல்​கிறார்​களோ அவருக்​கும் மகாதேவிக்​கும் திரு​மணம் என்று அறிவிக்​கிறார் மகா​ராஜா. ஓ.ஏ.கே.தேவருக்​கும் வீரப்​பாவுக்​கு​மான சண்​டை​யில் கருணாகரன் வென்​று ​விடுகிறார். இந்தச்​சண்டை பற்றி அறி​யாமல் இருக்​கும் வல்​லபனை ஒரு சிறு​வன் மூலம் தூண்​டி​விடு​கிறார் மகாதே​வி.

பிறகு கருணாகரனுக்​கும் வல்​ல​வனுக்​கும் நடக்​கிறது வாள் சண்​டை. இந்த கடுமை​யான மோதலில் வல்​ல​வன் வென்​று​விட, அவருக்கு மகாதே​வியை திரு​மணம் செய்து வைக்​கிறார்​கள். இருந்​தா​லும் மகாதேவி மீதான மோகம் கருணாகரனுக்​குப் போகவில்​லை. கடத்த முடிவு செய்​கிறார். ஆனால் மகாதேவிக்கு பதிலாக அரசனின் வளப்பு மகள் மங்​கம்​மாவைக் (எம்​.என்​.​ராஜம்) கடத்தி விடு​கிறார்​கள். தன் நோக்​கம் வெளியே தெரி​யாமல் இருக்க, மங்​கம்மாவைத் திரு​மணம் செய்​கிறார் கருணாகரன். இரண்டு தம்​பதிகளுக்​கும் குழந்​தைப் பிறக்​கிறது. மகாதேவி மீதான மையல் தெளி​யாத கருணாகரன், அவளு​டைய குழந்​தையை கொல்​லத் துணி​கிறார். இதை அறிந்த மங்​கம்​மா, குழந்​தையை மாற்றி விடு​கிறாள். தான் கொன்​றது தனது குழந்தை என்​பதை அறிகிறார் கருணாகரன். பிறகு என்ன நடக்​கிறது என்​பது கதை.

கொஞ்​சம் சிக்​கலான கதை​தான் என்​றாலும் அதை திரை​யில் குழப்​பமில்​லாமல் காட்​டி​யிருந்​தனர். இப்​படத்​தில் பி.எஸ்​.வீரப்பா பேசும் ‘மணந்​தால் மகாதே​வி, இல்​லை​யேல் மரணதே​வி’ என்ற வசனம் பிரபல​மானது. எம்​.என்​. ​ராஜம், வீரப்​பாவை அத்​தான் என்று அழைக்க, “அத்​தான், இந்த சத்​தான வார்த்​தையை கேட்டு செத்​தான் கருணாகரன்”, “இந்த நாடும் நாட்டு மக்​களும் நாச​மாய் போகட்​டும்” என்​பது உள்பட இப்​படத்​தின் வசனங்​கள் பேசப்​பட்​டன.

எம்​ஜிஆரின் மிரட்​டலான வாள் சண்டைக் காட்​சிகளை ரசிகர்​கள் கொண்​டாடி மகிழ்ந்​தனர். ஒரு வரலாற்​றுத் திரைப்​படத்​துக்​கான போர், காதல், மோகம், சூழ்ச்​சி, சதி என அத்​தனை அம்​சங்​களும் இதில் உண்​டு. கண்​ண​தாசனின் பன்ச் வசன​மும் எம்​.ஜி.ஆரின் ஆக்​ரோஷ​மான சண்​டை, அசத்​தலான பாடல்​கள் என

‘மகாதே​வி’யை கொண்​டாட ரசிகர்​களுக்கு காரணம் இருந்​தது. விஸ்​வ​நாதன்​-​ராமமூர்த்தி இசை​யில் பாடல்​கள் ஒவ்​வொன்​றும் இப்​போதும் ரசனை​யாகவே இருக்​கின்​றன.

‘குறுக்கு வழி​யில் வாழ்வு தேடிடும்​...’, ‘கண்​மூடும் வேளை​யிலும்​...’ ‘தந்​தன்னா பாட்டு பாட​ணும் துந்​தன்னா தாளம் போட​ணும்’, ‘உன் திரு​முகத்தை ஒரு முக​மா’ ‘காக்கா காக்கா மை கொண்​டா’, ‘ஏறு பூட்​டு​வோம் ’, ‘தா​யத்து தாயத்​து...’, ‘சேவை செய்​வதே ஆனந்​தம்​’ ஆகிய ​பாடல்​கள்​ வரவேற்பைப்​ பெற்​றன. ​பாடல்​களை மருத​காசி, பட்​டுக்​கோட்​டை கல்​​யாண சுந்​தரம்​, கண்​ண​தாசன்​, தஞ்​சை ​ராமை​யா ​தாஸ்​ எழு​தினர்​. 1957-ம்​ ஆண்​டு இதே தேதி​யில்​ (நவ.22) ரிலீஸ்​ ஆன இந்​தப்​ படம்​ வரவேற்பைப் பெற்​றது.

மகாதே​வி: இந்த நாடும் நாட்டு மக்​களும்​..!
‘தி ஃபேமிலிமேன் 3’ வெப் தொடரில் கவுரவ வேடத்தில் விஜய் சேதுபதி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in