“தனி​யாக இருப்​ப​தால் சுதந்திரமாக இருக்கிறேன்” - அனுமோள் மகிழ்ச்சி

நடிகை அனு​மோள்

நடிகை அனு​மோள்

Updated on
1 min read

தமிழில் கண்​ணுக்​குள்​ளே, சூரன், தில​கர் உள்பட சில படங்​களில் நடித்​திருப்​பவர் மலை​யாள நடிகை அனு​மோள். ‘அயலி’ வெப் தொடரில் நடித்​ததன் மூலம் கவனிக்​கப்​பட்ட இவர், தனிமை​யில் வாழ்​வது குறித்து எந்த வருத்​த​மும் இல்லை என்​றும், சுதந்திரமாகவும் மகிழ்ச்​சி​யாக​வும் இருப்​ப​தாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “நான் காதல் உறவில் இருக்க முயன்றேன். ஆனால் அது வெற்​றியடைய​வில்​லை. அதற்​காக யாரை​யும் குறை சொல்ல விரும்​ப​வில்​லை. சில உறவு​கள் இயல்பாக நீடிக்​காது. அது வாழ்க்​கை​யின் ஒரு பகு​தி. ஒரு பெண்ணின் வாழ்க்கை முழு​மையடை​யத் திரு​மணம் அவசி​யம் என்று நம்​ப​வில்​லை.

திரு​மணம் என்​பது வாழ்க்​கை​யின் ஒரே இலக்​காக இருக்​கக் கூடாது. நான் தனி​யாக இருப்​ப​தால் தற்​போது சுதந்​திர​மாக​வும் மகிழ்ச்​சி​யாக​வும் இருக்​கிறேன். என்னை நான் புரிந்​து​கொண்​டு, என் வாழ்க்​கையை என் விருப்​பப்​படி வாழ்​கிறேன். அதில் எனக்கு நிறைவு இருக்​கிறது” என்று தெரி​வித்​தார்.

<div class="paragraphs"><p><em>நடிகை அனு​மோள்</em></p></div>
பதிவு செய்யப்படாத வாகனம் மோதி விபத்து: உரிமையாளருடன் டீலரும் ரூ.97 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in