“தர​மான படைப்​பு​களில் தொடர்ந்து பயணிப்பேன்” - சாம் சிஎஸ் உறுதி

“தர​மான படைப்​பு​களில் தொடர்ந்து பயணிப்பேன்” - சாம் சிஎஸ் உறுதி
Updated on
1 min read

தமிழ், தெலுங்​கு, மலை​யாளம் என தென்​னிந்​திய சினி​மாவில் தொடர்ந்​து, தனித்​து​வ​மான பின்​னணி இசை மூலம் கவனம் ஈர்த்து வரும் சாம் சிஎஸ், அடுத்து இந்திக்கும் செல்கிறார்.

கைதி, விக்​ரம் வேதா, அடங்​கமறு, ஆர்​டிஎக்​ஸ், புஷ்பா 2, மஹாவ​தார் நரசிம்மா உள்​ளிட்ட பல படங்​களில் அவருடைய பின்​னணி இசை பேசப்​பட்​டது. இந்​நிலை​யில், 2016-ம் ஆண்டு வெளி​யான ‘புரி​யாத புதிர்’ படத்​துக்​காக அவருக்கு தமிழக அரசின் சிறந்த இசை அமைப்​பாளர் விருது கடைத்​துள்​ளது.

இதுபற்றி அவர் கூறும்​போது, “‘புரி​யாத புதிர்​’ படத்​தில் கதை​யின் மனநிலையை நுணுக்​க​மாக பிர​திபலிக்​கும் வகை​யில் பின்​னணி இசை அமைத்​திருந்​தேன். கதை​யின் த்ரில்​லர் அனுபவத்தை அது இன்​னும் தீவிர​மாக்​கியது.

அதற்கு விருது கிடைத்​திருப்​ப​தில் மகிழ்ச்​சி. அந்​தப் படக்​குழு​வுக்​கும் என் நன்​றி. இனி வரும் காலங்​களி​லும் ரசிகர்​களின் மனதைத் தொடும், மகிழ்விக்​கும் தரமான படைப்​பு​களில் தொடர்ந்து பணி​யாற்​று​வேன். இப்​போது சில வெப் தொடர்​கள், ரவிமோக​னின் கராத்தே பாபு, கார்த்​தி​யின் சர்தார் 2 உள்பட சில படங்​களில் பணி​யாற்​றிவரு​கிறேன்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

“தர​மான படைப்​பு​களில் தொடர்ந்து பயணிப்பேன்” - சாம் சிஎஸ் உறுதி
தனிநபர் வருமான வரியில் மாற்றம் இல்லை: மத்திய பட்ஜெட் 2026 - ஒரு விரைவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in