‘மொத ராத்திரி’​யில் வழக்கமான நாயகியாக நடிக்கவில்லை: அனிஷ்மா

‘மொத ராத்திரி’​யில் வழக்கமான நாயகியாக நடிக்கவில்லை: அனிஷ்மா
Updated on
1 min read

‘சிறை’, ‘யூத்’ ஆகிய படங்​களின் மூலம் கவனிக்​கப்​பட்​ட​வர் நடிகை அனிஷ்மா அனில்குமார். இவர் இப்​போது நடித்​துள்ள படம், ‘மொத ராத்திரி’. ராஜா கருப்​ப​சாமி இயக்​கி​யுள்ள இப்​படத்​தில் ரிஷிகாந்த், சேத்​தன், ஏ.வெங்​கடேஷ், பானுப்​பிரியா என பலர் நடித்துள்ளனர்.

மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்​துள்ள இப்​படத்​தில் நடித்திருப்பது பற்றி அவர் கூறும்​போது, “இதில் எனது கதாபாத்திரத்​தின் உணர்​வுப்​பூர்​வ​மான தன்​மை​தான் என்னை கவர்ந்​தது. குறிப்​பாக, பெண்​கள் பல நேரங்​களில் ஒரே நேரத்​தில் பல்​வேறு உணர்வுகளை அனுப​விப்​பார்​கள். அதி​லும், அவர்​கள் முற்​றி​லும் புதி​தான ஒரு சூழ்​நிலை​யில் இருக்​கும்​போது அந்த உணர்​வு​கள் இன்​னும் அதி​க​மாக இருக்​கும்.

அதனால், வழக்​க​மான நாயகி கதா​பாத்​திர​மாக சித்​தரிக்​காமல், உண்​மைத் தன்​மை​யுடன் அணுக வேண்​டும் என்று விரும்பி அதற்கேற்ப நடித்​திருக்​கிறேன். ஒரு பெண் தனது வாழ்​வின் அடுத்த கட்டத்​துக்​குள் செல்​லும்​போது, ஏற்​படக் கூடிய எதிர்​பார்ப்​பு​கள், பதற்​றம் இதில் இருக்​கின்​றன.

நடிகை​யாக என்​னுடைய முதிர்ச்​சி​யான பக்​கத்தை இப்​படம் வெளிப்​படுத்தி இருக்​கிறது. நகைச்​சுவை​யும் பொழுது​போக்கு அம்​சங்​களும் இருப்​ப​தால் ரசித்து நடித்​தேன். உறவு​கள், குடும்​பச் சூழல்​கள் மற்​றும் எதிர்​பா​ராத நிகழ்​வு​களின் வழி​யாக கதை​யில் எனக்​கும் அதிக முக்​கி​யத்​து​வம் இருக்​கிறது” என்று தெரிவித்துள்ளார்.

‘மொத ராத்திரி’​யில் வழக்கமான நாயகியாக நடிக்கவில்லை: அனிஷ்மா
“கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உள்நோக்கம் இல்லை” - பேரவையில் அமைச்சர் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in