பாசத்தோடு கட்டிப் போட்டவர் ஏவிஎம் சரவணன்: படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

பாசத்தோடு கட்டிப் போட்டவர் ஏவிஎம் சரவணன்: படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
Updated on
1 min read

சென்னை: நம்​மையெல்​லாம் பாசத்​தோடு கட்​டிப்​போட்​ட​வர் ஏவி.எம்​.சர​வணன் என்று முதல்​வர் ஸ்டா​லின் புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த திரைப்​படத் தயாரிப்​பாளர் ஏவி.எம்​..சர​வணனின் நினை​வேந்​தல் நிகழ்ச்​சி, சென்னை விரு​கம்​பாக்​கத்​தில் உள்ள ஏவி.எம். மேல்​நிலைப் பள்​ளி​யில் நேற்று நடை​பெற்​றது. சரவணன் படத்தை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் திறந்து வைத்​தார்.

நிகழ்​வில் முதல்​வர் பேசி​ய​தாவது: வரலாற்​றில் தமிழ் திரையுலகத்தை பற்றி குறிப்​பிட வேண்​டுமென்​றால், அதில் நிச்சய​மாக ஏவி.எம். நிறு​வனத்தை குறிப்​பி​டா​மல் இருக்​கவே முடியாது. அப்​பச்சி என்று மரி​யாதை​யுடன் அழைக்​கப்​படும் ‘மெய்யப்ப செட்​டி​யார்’ மறைவுக்கு பிறகு இந்​நிறு​வனத்தை சரவணன் எப்​படி​யெல்​லாம் கட்​டிக் காத்​திருக்​கிறார் என்று அவருடன் நெருங்​கிப் பழகி​யிருக்​கக்​கூடிய ரஜினி​காந்த், கமல்ஹாசன் ஆகியோர் குறிப்​பிட்டு சொன்​னார்​கள்.

நான் சென்னை மேய​ராக இருந்​த​போது கடற்​கரை​யில் நடை பயிற்​சிக்கு செல்​வதுண்​டு. அப்​போது சரவணனும், அவருடைய நண்​பர்​களோடு நடைப​யிற்​சிக்கு வரு​வார். நான் அடிக்​கடி அவரை சந்​தித்து பேசுவதுண்​டு. சென்னை எப்​படி இருக்​கிறது, எப்படி அதை டெவலப் செய்ய வேண்​டும் என்​றெல்​லாம் அறிவுரைகளை சொல்​லி​யிருக்​கிறார். இங்கே திறந்து வைக்கப்பட்ட படத்​தில் சரவணன் கை கட்டி இருக்​கின்ற அந்த காட்சி எல்​லோருக்​கும் தெரி​யும்.

எல்​லோரும் கை கட்​டு​கிறோம். ஆனால், அவர் கை கட்டி நிற்பதுதான் இன்​றைக்​கும் அனை​வரின் நினை​விலும் பரவலாக இருக்​கிறது. ஏதோ பயத்​தின் காரண​மாக அல்ல, அன்​பின் காரண​மாக, பாசத்​தின் காரண​மாகத்​தான் அவர் அவ்​வாறு கை கட்டி நிற்​கிறார். இன்​னும் சொல்ல வேண்​டுமென்​றால், அவர் நம்மையெல்லாம் பாசத்​தோடு கட்​டிப்​போட்டு வைத்​த​தால்​தான் அவ்​வாறு கை கட்டி நின்று நமக்கு பாட​மாகி​யிருக்​கிறார். இவ்வாறு முதல்​வர் பேசி​னார்.

நடிகர் ரஜினி​காந்த் பேசும்​போது, “சினிமா மட்​டுமின்​றி, தனிப்பட்ட முறை​யிலும் எனக்கு உதவிய​வர் ஏவி.எம் சரவணன். ராகவேந்​திரா திருமண மண்​டபத்தை கட்ட ஆலோ​சனை வழங்கிய​வர்.

திரைப்​படங்​களை எடுக்​கும்​போதே அனைத்து கோணங்​களி​லும் யோசிக்​கக் கூடிய​வர் அவர். ‘சி​வாஜி’ படம் முடிந்த பிறகு ‘நீங்க ஏன் 2 வருஷம் 3 வருஷத்​துக்கு ஒரு முறை படம் பண்​றீங்க? வேண்டாம், வருஷத்​துக்கு ஒரு படம் நடிங்க. வயசு ஆக ஆக பிசியா இருக்​கணும், ஆக்​டிவா இருக்​கணும்’ என்று சொன்​னார்.

பாசத்தோடு கட்டிப் போட்டவர் ஏவிஎம் சரவணன்: படத்திறப்பு நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
டாலரின் ஆதிக்கத்தை நிலை நிறுத்த... - வெனிசுலா மீதான அமெரிக்க தாக்குதல் பின்புலம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in