கல்வி வியா​பாரம் குறித்து பேசும் ‘பேட்டில்’

கல்வி வியா​பாரம் குறித்து பேசும் ‘பேட்டில்’
Updated on
1 min read

அர்​ஜுன் பிர​பாகரன், ஆராத்யா முதன்மை வேடங்​களில் நடித்​துள்ள‌ திரைப்​படம், ‘பேட்டில்’. சுப்​பிரமணி​யம் சிவா, சரவண சுப்​பை​யா, காயத்​ரி, முனீஷ்​காந்த், உறியடி சுருளி, திஹான், திவ்ய ஸ்ரீ உள்​ளிட்​டோர் முக்​கிய பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

எலைட் டாக்​கீஸ் சார்​பில் கே.​பாஸ்​கரன் தயாரித்​துள்ள இப்​படத்தை நாராயணன் பழனி இயக்​கி​யுள்​ளார். ஜீவா இசையமைத்​துள்​ளார். யுவ​ராஜ் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இதன் டிரெய்​லர் வரவேற்பை பெற்​றுள்ள நிலை​யில் ஏப். 24-ம் தேதி படம் வெளி​யாகிறது.

படம் பற்றி இயக்​குநர் நாராயணன் பழனி கூறும்​போது, “நல்ல அரசு நாட்​டுக்கு எவ்​வளவு முக்​கியமோ, நல்ல கல்வியும் அவ்​வளவு அவசியமானது. அதை வலி​யுறுத்​தும் படம் தான் இது. தரமான‌ கல்​வியை அனை​வரும் பெறுவதற்கு தடை​யாக உள்ள கல்வி வியா​பாரம் குறித்து சொல்​லி​யிருக்​கிறோம். மியூசிக்​கல் லவ் ஸ்டோரி​யாக உருவாகி இருக்​கும் இப்​படம் முக்​கிய​மான சமூக சிக்​கல் ஒன்​றை​யும்​ வெளிச்​சம்​ போட்​டுக்​​காட்​டும்​” என்​றார்​.

கல்வி வியா​பாரம் குறித்து பேசும் ‘பேட்டில்’
Welcome to Dongmakgol: மகிழ்வூட்டும் திரை மொழியில் யுத்தமும் மனிதமும் | ஓடிடி சினிமா அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in