கோணமும் ராகமும்: கண்ணுக்குத் தெரியாத ரசவாதம் | ஒளி என்பது வெளிச்சமல்ல 26

மின்​சார கனவு

மின்​சார கனவு

Updated on
3 min read

ஒலி​யும் ஒளி​யும் இணைந்து பார்​வை​யாளர்களின் ஆழ்​மனதோடு நிகழ்த்​தும் உரை​யாடலே திரைப்​படங்​கள். ஒளிப்​ப​தி​வாளரின் கோண​மும், இசையமைப் பாளரின் ராக​மும் இணை​யும் புள்​ளி​யில் ஒரு காட்​சி​யின் ஆன்மா பிறக்​கிறது.

நீண்ட ஷாட்​களும் இசை​யின் சுவாச​மும்

ஒளிப்​ப​திவு ஒரு கதையைச் சொல்​லும் ‘உடல்’ என்​றால், பின்​னணி இசை மற்​றும் பாடல்​கள் அந்த உடலுக்கு உயிர் கொடுக்​கும் ‘ஆன்​மா’ போன்​றது. காட்​சி​யில் வெட்​டு​கள் குறை​வாக இருந்​து, கேமரா நீண்ட நேரம் ஒரு​வரை அல்​லது ஒரு சூழலைப் பின்​தொடரும்​போது அங்கே இசை முழு​மை​யாகத் தன் ஆதிக்​கத்​தைச் செலுத்​தத் தொடங்​கு​கிறது.

வெற்​றிடம்: வசனங்​கள் இல்​லாத நீண்ட ஷாட்​களில், அந்த மவுனத்தை நிரப்​புவது இசை​தான். இது பார்​வை​யாள​ருக்​குக் காட்​சி​யின் உணர்வை உள்​வாங்​கத் தேவை​யான நேரத்​தை​யும் இடத்​தை​யும் வழங்​கு​கிறது.

<div class="paragraphs"><p>திருடா திருடா</p></div>

திருடா திருடா

ஒத்​திசைவு : கேம​ரா​வின் நகர்​வும் இசை​யின் தாள​மும் ஒன்​றாக இணை​யும் போது, பார்​வை​யாளர் ஒரு​வித​மான ‘டி​ரான்​ஸ்’ நிலைக்​குச் செல்​கிறார்.

ஒளி​யும் தாள​மும்: பி.சி. ஸ்ரீராம் எனும் மேதை

ஒளிப்​ப​திவுத் தொழில்​நுட்​பத்​தில் ‘ஒளியை இசையோடு இணைப்​பது’ ஒரு மைல்​கல். இதற்கு சிறந்த உதா​ரணம் ‘திருடா திரு​டா’ படத்​தின் ‘சந்​திரலே​கா’ பாடல். இந்​தப் பாடலில் இசை​யின் ஒவ்​வொரு துடிப்​புக்​கும் ஏற்ப ஒளி​யின் நிற​மும், திசை​யும், தீவிர​மும் மாறும்.

பிற்​காலத்​தில் இந்​தத் தொழில்​நுட்​பம் நவீன மியூசிக் வீடியோக்​கள் மற்​றும் கச்​சேரி ஒளிப்​ப​திவு​களுக்கு முன்​னோடியாக அமைந்​தது. `கீதாஞ்​சலி' (1989) படத்​தில் ஊட்​டி​யின் மூடு​பனி மற்​றும் பனி சூழ்ந்த காட்​சிகள், குறிப்​பாக உட்​புறங்​களுக்​குள் புகுந்து செல்​லும் இவரது மேஜிக் ஒளிப்​ப​தி​வும் இளை​ய​ராஜா​வின் பின்​னணி இசை​யும் ஆழமான ஆராவைக் கொடுத்​தது. இசை​யின் மெல்​லிசைத் தன்​மை​யும், ஒளி​யின் மென்​மை​யும் சேர்ந்து பார்​வை​யாளரை ஒரு பரவச உணர்​வில் ஆழ்த்​தி​யது.

<div class="paragraphs"><p>மண்​வாசனை</p></div>

மண்​வாசனை

‘மண்​வாசனை’ பட அனுபவம்

ஒளிப்​ப​திவுக்​கும் இசைக்​கும் இடையி​லான உறவு என்​பது ரசனை சார்ந்​தது மட்​டுமல்ல, அது தொழில்​நுட்ப ரீதி​யான பிணைப்​பும் கூட. இதற்​குச் சிறந்த உதா​ரணம், பார​தி​ராஜா​வின் ‘மண்​வாசனை’ பட இடைவேளைக் காட்​சி.

இந்​தக் காட்​சி​யில் ஒரு சில்​ல​வுட் ஷாட்டை கையில் கேம​ராவை ஏந்தி ‘ஹேண்ட்​-ஹெல்ட்’ முறை​யில் படமாக்​கி​னார் ஒளிப்​ப​தி​வாளர் பி.கண்​ணன். மாலை நேரத்து மங்​கலான வெளிச்​சத்​தில் எடுக்​கப்​பட்ட அந்​தக் காட்​சி​யில், கேமரா நகரும்​போது சில தேவையற்ற அசைவுகள் (ஜெர்க்​ஸ்) ஏற்​பட்​டு​விட்​டன.

ஆனால், இளை​ய​ராஜா அந்த கேமரா ஜெர்க்கை ஒரு கலைப் படைப்​பாக மாற்​றி​னார். கேம​ரா​வில் எப்​போதெல்​லாம் ஜெர்க் ஏற்​படு​கிறதோ, சரி​யாக அந்த நொடிகளில் இசை​யின் துடிப்​பு​களைப் பொருத்​தி​னார். இசை​யின் துணை​யோடு தீவிர​மான மனநிலையை உரு​வாக்​கும் மாபெரும் காட்​சி​யாக அது மாறியது. இங்கே இசை என்​பது ஒளிப்​ப​தி​வின் சவால்​களைத் துடைத்​தெறி​யும் மந்​திரக்​கோல்.

தாளத்​துக்​கேற்ப நகரும் கேம​ரா:

கன்னட ‘த்​வீ​பா’ ஒரு பாடம் ‘த்​வீ​பா’ படத்​தின் ஒளிப்​ப​தி​வாளர் ராமச்​சந்​திரா படப்​பிடிப்​புக்கு முன்பே இசையமைப்​பாளர் ஐசக் தாமஸ்​ஸிடம் அந்​தப் படத்​தின் தீம் மியூசிக்​-கை பெற்​றுக்​கொண்​டார். அந்த இசை​யின் நீளம், வேகம் மற்​றும் தாளத்தை உள்​வாங்​கி, அதற்​கேற்ப தனது ‘ட்​ராலி’ நகர்​வு​களைத் திட்​ட​மிட்​டார்.

அதாவது, இசை​யின் வேகம் கூடும்​போது கேம​ரா​வின் வேக​மும், இசை நிதானிக்​கும்​போது கேம​ரா​வின் அசை​வும் கச்​சித​மாகப் பொருந்​தி​யது. இது திரை​யில் கவித்​துவமான ஒத்​திசைவை ஏற்​படுத்​தி​யது.

பாடல் கட்​டமைப்​பு: ஒளிப்​ப​தி​வாளரின் பார்வை

ஒரு பாடலை ஒளிப்​ப​திவு செய்​வதற்கு முன், அதன் இசைக் கட்​டமைப்பை ஒளிப்​ப​தி​வாளர் நுணுக்​க​மாகப் புரிந்​து​கொள்ள வேண்​டும்: பல்​லவி - இது பாடலின் முகம். இங்கே பொது​வாக ‘எஸ்​டாபிளிஷிங் ஷாட்​கள்’ மற்​றும் கதா​பாத்​திரங்​களின் அறி​முகம் பிரம்​மாண்​ட​மாக இருக்​கும்.

சரணம் - இங்கே கதை நகரும். கேமரா மூவ்​மென்ட்​கள் கதா​பாத்​திரங்​களின் உணர்​வு​களுக்கு ஏற்ப மென்​மை​யாகவோ அல்​லது வேக​மாகவோ அமை​யும். இசைக்​கோப்பு - இங்​கே​தான் ஒளிப்​ப​தி​வாளர்​கள் தங்​கள் கைவரிசையைக் காட்​டு​வார்​கள். வசனங்​கள் இல்​லாத​தால், டிராலி கிரேன் அல்​லது ஜிம்மி ஜிப் பயன்​படுத்தி நீண்ட, சிக்​கலான நகர்​வு​களை உரு​வாக்​கு​வார்​கள்.

டிராலி மற்​றும் கிரேன்: இசை​யின் நடனம்

இசை ஒரு நதி​யைப் போல ஓடும்​போது, கேம​ரா​வும் அதே வேகத்​தில் நகர வேண்​டும். ஒரு பாடலின் உச்​சகட்ட உணர்வை எட்​டும்​போது, கேமரா கீழிருந்து மேலாக உயர்ந்து அந்த இடத்​தின் பிரம்​மாண்​டத்​தைக் காட்​டும். ஒரு மெல்​லிசைப் பாடலில், டிராலி மூலம் கேமரா மிக மெது​வாக நகரும்​போது, அது அந்த இசை​யின் மென்​மை​யைக் காட்​சிப்​படுத்​துகிறது.

‘சவுண்ட் ஆஃப் மியூசிக்’ முதல்

‘மின்​சார கனவு’ வரை இசை சார்ந்த திரைப்​படங்​கள் ஒளிப்​ப​திவுத் தொழில்​நுட்​பத்தை அடுத்த கட்​டத்​துக்கு எடுத்​துச் சென்​றன. த சவுண்ட் ஆஃப்​,மியூசிக் - ஆல்ப்ஸ் மலை​யில் கேமரா வான்​வழி​யாக சுழன்று வந்து ஜூலி ஆண்ட்​ரூஸைக் காட்​டு​வது, அந்​தப் பாடலின் சுதந்​திரத்தை உணர வைத்​தது.

ராஜீவ் மேனனின் மின்​சார கனவு -ரவி கே.சந்​திரன் ஏ.ஆர்​.ரஹ்​மானின் இசைக்கு ஏற்ப கேம​ராவை எப்​படி ஒரு பாத்​திர​மாகவே மாற்​றி​னார்​கள் என்​ப​தற்கு ‘வெண்​ணிலவே வெண்​ணில​வே’ பாடல் ஒரு சிறந்த சான்​று. ஒளி​யின் மென்​மை​யும் கேம​ரா​வின் மெது​வான நகர்​வும் அந்​தப் பாடலை ஒரு கனவு போல மாற்​றி​யிருக்​கும்.

மவுனம்: ஒலியை விட வலிமை​யானது

பல நேரங்​களில், உரத்த இசையை விட மவுனம் அதி​கப்​படி​யான அதிர்​வு​களை ஏற்​படுத்​தும். ஒளிப்​ப​தி​வில் மவுனம் என்​பது ஒரு ‘காட்சி மொழி’.

ஆழமான பாதிப்​பு: போர்க்​களக் காட்​சி​யில் அல்​லது ஒரு மரணத்​தின் போது, திடீரென ஏற்​படும் மவுனம்​ பார்​வை​யாளர்​களை அந்​தக் காட்​சி​யின் தீவிரத்​துக்​குள் இழுக்​கும். இசை என்​பது ஒரு கால அளவு (டைம்), ஒளிப்​ப​திவு என்​பது ஒரு வெளி (ஸ்​பேஸ்​). இவை இரண்​டும்​ இணை​யும்​போது ஒரு திரைப்​படம்​ ‘காலத்​தைக்​ கடந்​த கலை​யாக’ மாறுகிறது.

(புதன்தோறும் ஒளி காட்டுவோம்)

- cjrdop@gmail.com

<div class="paragraphs"><p>மின்​சார கனவு</p></div>
கட்-அவே ஷாட்டுகள்: காட்டாத காட்சிகளின் கலை | ஒளி என்பது வெளிச்சமல்ல 25

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in