‘ஸ்​பைடர்’ பட தோல்வி அதிகம் பாதித்​தது: ரகுல் ப்ரீத் சிங் வருத்தம்

‘ஸ்​பைடர்’ பட தோல்வி அதிகம் பாதித்​தது: ரகுல் ப்ரீத் சிங் வருத்தம்
Updated on
1 min read

ஏ.ஆர்​.​முரு​க​தாஸ் இயக்​கத்​தில் மகேஷ்​பாபு கதா​நாயக​னாக நடித்த படம், `ஸ்பைடர்’. தமிழ், தெலுங்​கில் உரு​வான இப்​படத்​தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகி​யாக நடித்​தார். எஸ்​.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்​தனர்.

இந்த திரைப்​படம் வெளி​யா​வதற்கு முன்பு பெரும் எதிர்​பார்ப்பு இருந்​தது. ஆனால், இப்​படம் மோச​மான தோல்​வியைத் தழு​வியது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் தோல்வி தன்னை மிக​வும் பாதித்​தது என்று ரகுல் ப்ரீத் சிங் தெரி​வித்​துள்​ளார்.

இதுபற்றி அவர் கூறும்​போது, “தெலுங்​கில் தொடர்ச்​சி​யாக 8, 9 வெற்​றிகளைப் பெற்ற பிறகு, ‘ஸ்​பைடர்’ எனது வாழ்க்​கை​யில் முதல் தோல்வி படம். அதி​கம் எதிர்​பார்த்த ஒரு படம் தோல்வி அடை​யும் போது அந்த உணர்வு எப்​படி இருக்​கும் என்​ப​தைப் புரிந்​து​கொண்​டேன். அந்த ஏமாற்​றம் என்னை மிக​வும் பாதித்​தது.

அந்​தப் படத்​துக்​குப் பிறகு மனதள​வில் மீள்​வதற்கு எனக்கு நீண்ட காலம் ஆனது. அதனால் தான் சிறிது காலம் தெலுங்கு சினி​மா​வில் இருந்து விலகி இருக்க முடிவு செய்​தேன்” என்​றார்.

ரகுல் ப்ரீத் சிங், தமிழில் ‘தடையறத் தாக்க’ படம் மூலம் அறி​முக​மா​னார். ‘தீரன் அதி​காரம் ஒன்​று’, ‘அய​லான்’, ‘இந்​தி​யன் 2’ படங்​களில் நடித்​துள்​ளார்.

‘ஸ்​பைடர்’ பட தோல்வி அதிகம் பாதித்​தது: ரகுல் ப்ரீத் சிங் வருத்தம்
அனுமதியின்றி பெயர், புகைப்படங்களை பயன்படுத்த தடை கோரி ஷில்பா ஷெட்டி வழக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in