என் மகன் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 39

என் மகன் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 39
Updated on
3 min read

எனக்கு 1994-ம் ஆண்டு மகள் பிறந்​தது பற்​றி​யும் அவர் படித்​தது, காதல் திரு​மணம் செய்து கொண்​டது, குரல் கலைஞ​ராகப் பணி​யாற்​று​வது குறித்து ஏற்​கெனவே கூறி​யிருக்​கிறேன்.

எனக்கு மகள் பிறந்​ததும் ஒரு குழந்தை போதும், அவரை நல்​லபடி​யாக வளர்க்​கலாம் என்​று​தான் முடிவு செய்​திருந்​தோம். ஆனால் மகன் உரு​வாகி​விட்​டார். 1999-ம் ஆண்டு பிறந்​தார் மகன் ஆதித்​யா.

சின்ன வயதிலேயே அவருக்​குக் கொஞ்​சம் சேட்டை அதி​கம். அது குழந்​தைகளுக்கே உண்​டானது​தான். எப்​போதும் என் அரு​கில்​தான், என்​னைக் கட்​டிப்​பிடித்​துக் கொண்டு படுத்​துக் கொள்​வார். பிறகு அவராகவே அக்​கா​வின் புத்​தகப் பையைத் தூக்​கிக்​கொண்​டு, “ஸ்​கூலு ஸ்கூலு” என்​பார்.

“உங்​களுக்கு இன்​னும் வயசாக​வில்லை தம்​பி” என்​போம். எங்​கள் ஊரில் ஒரு​வருக்கு மூன்று பிள்​ளை​கள் இருக்​கிறார்​கள் என்​றால், பெரிய தம்​பி, நடுத்​தம்​பி, சின்​னத்​தம்பி என்று அழைப்​பது வழக்​கம். அதன்​படி இவரை நாங்​கள் தம்பி என்றே அழைப்​போம்.

என் மகளை​யும் சரி, மகனை​யும் சரி, “வா, போ” என்று ஒரு​மை​யில் அழைப்​ப​தில்​லை. “வாங்க” என்​று​தான் அழைப்​போம். அவருக்கு அக்கா ஐஸ்​வர்யா என்​றால் ரொம்ப பிரி​யம். அவரும் இவனை ஆதிமா என்று அழைப்​பார்.

சின்ன வயதில் உடல் உறுப்​பு​களை ஆங்​கிலத்​தில் சொல்லி அதித்​யா​விடம் கேட்​போம். காதில் கையை வைத்​து, இது என்ன? என்​றால் ‘இயர்’ என்​பார். வாயில் விரல் வைத்து இது என்ன என்று கேட்​டால், ‘மவுத்’ என்​பார்.

அப்​படி கண்​ணில் கைவைத்து இது என்ன என்று கேட்​டால், ‘அய்​ஸ்’ என்று சொல்​லாமல் ‘அக்​கா’ என்​பார். நான் விளை​யாட்​டாக, ‘நான் உனக்கு ஒரு கார் வாங்​கித் தர்​றேன், பெரிய வீடு வாங்​கித் தர்​றேன், ஒரே ஒரு தடவை உங்க அக்​காவை, ‘வா’ என்று ஒரு​மை​யில் கூப்​பிடுங்க’ என்​றால் மறுத்து விடு​வார்.

அவர் பள்​ளிப்​படிப்பு முடித்​ததும் அவரை ஏரோ​நாட்​டிக்​கல் இன்​ஜினீயர் ஆக்க வேண்​டும் என்று நினைத்​தேன். ஆனால் அவர் “நான் விஸ்​காம் தான் படிக்​கப் போகிறேன்” என்​றார். அவர் விருப்​பத்​துக்கு ஏற்ப சரி என்று சொல்​லி​விட்​டேன். அதில் ஒளிப்​ப​திவு படிக்​கட்​டும்​என்று சேர்த்​து​விட்​டேன். பிறகு, “இல்லை இல்​லை, நான் ஆக்​டிங் தான் படிக்​கப் போறேன்” என்​றார். சரி என்று கோர்ஸ் மாற்​றினோம்.

அவர் படித்​துக்​கொண்​டிருக்​கும்​போது, ஒரு நாள் காலை​யில் எனக்கு போன் அழைப்பு வந்​தது. ஒரு நிறு​வனத்​தின் பெயரைச் சொல்​லி, “சார் இந்த மாதிரி கம்​பெனில இருந்து பேசுறோம், ஒரு நல்ல கேரக்​டர் இருக்​கு” என்​றார்​கள். “சரி சார் சொல்​லுங்​க, கேட்​கிறேன்” என்​றேன்.

“சார் உங்​களுக்கு இல்ல, உங்க மகனுக்​கு” என்​றார்​கள். எனக்கு ஆச்​சரி​யம். எப்​படி என் மகனை அவர்​களுக்​குத் தெரிந்​தது என்​று. பிறகு​தான் புரிந்​தது, அன்று வெளி​யான வார இதழ் ஒன்​றில் என் குடும்​பப் புகைப்​படம் வெளி​யாகி இருந்​தது. பிறகு, “ஐயா, அவரு இப்​ப​தான் படிச்​சுக்​கிட்டு இருக்​காரு.

அவரு வந்​ததும் நடிக்க விருப்​பம் இருக்​கான்னு கேட்​டுட்டு சொல்​றேன்” என்​றேன். அவர் வீட்​டுக்கு வந்​ததும், கேட்​டேன். “ஓ, நடிக்​கிறேன்” என்​றார். என் வீட்​டுக்கு அடுத்த தெரு​வில்​தான் அந்த அலு​வல​கம் இருந்​தது.

ஆதித்​யாவை அழைத்​துச் செல்​லும்​போது, இயக்​குநர் இல்​லை. அசிஸ்​டென்ட், அசோசி​யேட் இயக்​குநர்​கள் இருந்​தார்​கள். “ஐயா, இது என் பையன், கூட்​டிட்டு வந்​திருக்​கேன், பாத்​துக்​கோங்க” என்று சொல்​லி​விட்டு வந்​து​விட்​டேன். அந்த படம் 96.

<div class="paragraphs"><p> ‘96’ படத்தில்...  </p></div>

‘96’ படத்தில்...

பின்​னர் இயக்​குநர் பிரேம் படத்​தின் கதையைத் தெளி​வாகச் சொல்லி இருக்​கிறார். நான் ஆதித்யாவிடம், கதை என்ன, கேரக்​டர் என்ன? என்​பது பற்றி எது​வும் கேட்​டுக்​கொள்​ள​வில்​லை. பிறகு அதில் நடித்​தார். கும்​பகோணத்​தில் படப்​பிடிப்பு நடை​பெற்​றது. நான் இயக்​குநருக்கு போன் செய்​து, “படப்​பிடிப்​புக்கு ஆதித்யா சரி​யாக வரு​கிறா​ரா?”என்று அக்​கறை​யில் கேட்​டேன்.

“சார், உங்​களை விட சரியா நடந்​துக்​கிறார். ‘உங்​களுக்கு ஷாட் முடிந்​தது, போகலாம்’ என்​றால்​தான் போகிறார். எதிர்​பார்க்​கிறதை விட பிர​மாத​மாக நடிக்​கிறார்” என்​றார்​கள். அந்த படத்​தின் ஸ்கூல் பகுதி காட்​சிக்​காக, பட்​டினி கிடந்​து, உடல் இளைத்து நடித்​தார்.

அந்​தப் படப்​பிடிப்பு முடிந்​ததும் காலேஜ் பகு​திக்​காக நன்​றாகச் சாப்​பிட்​டு, தின​மும் ஜிம்​முக்கு சென்று உடலை ஏற்றி வைத்​திருந்​தார். அந்​தப் படம் பார்க்​கும் போதே, தெரிந்​திருக்​கும், ஸ்கூல் மற்​றும் கல்​லூரி காலத்​துக்​கு​மான உடல் வித்​தி​யாசம். என்​னுடைய நண்​பன் சீயான் விக்​ரம் மாதிரி, இவரும் கதா​பாத்​திரத்​துக் காக என்ன வேண்​டு​மா​னாலும் செய்​கிறார் என்​பது மகிழ்ச்​சி​யாக இருந்​தது.

அந்​தப் படம் முடிந்து டப்​பிங் பேசச் செல்​வதற்கு முன், ‘எட்டு தோட்​டாக்​கள்’ படத்​தில் நான் நடித்த கேண்​டீன் காட்​சி​யைப் போட்​டுக் காண்​பித்​தேன். “இதுல அப்பா எவ்​வளவு நேச்​சுரலா பேசிருக்​கேன்​றதைப் பாரு. அது​போல டப்​பிங்ல எல்​லாமே கொடுக்​கணும்” என்​றேன். கேட்​டுக்​கொண்​டார். படம் முடிந்​து​விட்​டது. படம் பார்க்கக் கூப்​பிட்​டார்​கள். பார்த்​து​விட்​டு, மிரண்டு போயிட்​டேன்.

“இப்​படிப்​பட்ட ஒரு பையனை நம்ம வேறொரு துறைக்கு அனுப்ப இருந்​தோமே, இவருக்கு நடிப்பு இயல்​பாகவே வருது, நாம அதைத் தடுக்க வேண்​டாம்” என்று முடிவு செய்​தேன். படம் பார்த்​து​விட்டு வீட்​டுக்கு வந்​ததுமே “நான் ஆதித்யா பாஸ்​கரின் தந்தை எம்​.எஸ்​.​பாஸ்​கர்” என்று போனில் ஸ்டேட்​டஸ் வைத்​தேன். எனக்கு அதை டைப் பண்​ணும்​போது அவ்​வளவு மகிழ்ச்​சி.

‘96’ படம் வரவேற்​பைப் பெற்று ஆதித்​யா​வின் நடிப்​புக்​கும் பாராட்டு கிடைத்​தது. எனக்கு யாராவது போன் பண்​ணி, “உங்க பையனுக்கு ஒரு கதை சொல்​லணும்” என்​றால், “பையன்​கிட்ட சொல்​லுங்க, என்​கிட்ட ஏன் சொல்​றீங்​க?” என்று மறுத்து விடு​வேன்.

அவர​வர் வாழ்க்கை அவர​வர் கையில். தீதும் நன்​றும் பிறர்தர வாரா. அதனால் அவர் நடிக்​கும் கதா​பாத்​திரத்தை அவரே தேர்வு செய்​து​கொள்​ளட்​டும் என்று அவரிடம் சொல்​லி​விட்​டேன். பிறகு ‘ரெபல்’ என்ற படத்​தில் நடித்​தார்.

பிறகு ‘ஹாட்​ஸ்​பாட் 1’ பண்​ணி​னார். இப்​போது ‘ஹாட்​ஸ்​பாட் 2’ படத்​தில் நடிக்​கிறார். நான்​கைந்து படங்​களில் கதா​நாயக​னாக நடித்து வரு​கிறார். மக்​கள் எனக்​குக் கொடுத்​துக் கொண்​டிருக்​கக் கூடிய அதே ஆதர​வை, அவருக்​கும்​ கொடுக்​க வேண்​டும்​ என்​பதும்​ சினி​மா​வில்​ அவரும்​ மிகப்​ பெரிய இடத்​தை அடைய வேண்​டும்​ என்​பதும்​ என்​ ஆசை.

என் மகன் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 39
என் வளர்ச்​சியை தாமதப்படுத்திய இயக்​குநர் - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 38

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in