

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் 'கேஜிஎஃப்', 'காந்தாரா' உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் நேரடியாக தமிழில் முதன்முறையாக தயாரிக்கும் 'ரகு தாத்தா' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
பெரும் வரவேற்பை பெற்ற 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடருக்கு கதை எழுதிய சுமன் குமார் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் 'ரகு தாத்தா'. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒய் யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
நாயகியை மையமாக கொண்ட இப்படத்தை ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ ஆகிய படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் நேரடி தமிழ்ப் படம் இதுவாகும்.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்றதை படக்குழுவினர் கீர்த்தி சுரேஷுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இறுதி கட்ட பணிகளை விரைவில் முடித்து இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.