Published : 15 Apr 2023 07:55 PM
Last Updated : 15 Apr 2023 07:55 PM

‘பாரில் யாரும் அடிமையில்லை என்று கூற வா...’ - ‘பொன்னியின் செல்வன் 2’ ஆந்த்தம்

‘பொன்னியின் செல்வன் 2’ படத்திற்காக ‘பொன்னியின் செல்வன் ஆந்த்தம்’ என்ற தனிப் பாடல் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பாடல் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாகத் திரைப்படமாக்கி இருக்கிறார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸும் இணைந்துத் தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன் உட்பட பலர் நடித்துள்ளனர்.

இதன் இரண்டாம் பாகம் வரும் 28-ம் தேதி வெளியாகிறது. முதல் பாகம் அதிக வரவேற்பைப் பெற்றதால், இரண்டாம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் 16ம் தேதி முதல் இந்தப் படத்தின் புரமோஷன் தொடங்குகிறது. முதல் பாகத்தைப் போல இந்தப் பாகத்தின் புரமோஷனுக்கும் படக்குழுவினர் இந்தியா முழுவதும் செல்ல இருக்கின்றனர்.

இதற்கிடையே ‘பொன்னியின் செல்வன் ஆந்த்தம்’ தனிப் பாடல் இந்தப் படத்துக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை சிவா ஆனந்த் எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்து பாடியுள்ளார். பாடல் தற்போது படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாடல் வீடியோ:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x