அஜித் தந்தை மறைவுக்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி

அஜித் தந்தை மறைவுக்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர்கள் சூர்யா, கார்த்தி
Updated on
1 min read

நடிகர் அஜித்தின் தந்தை மறைவிற்கு நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி நேரில் சென்று ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் கடந்த 24-ஆம் தேதி அதிகாலை உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்த பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் அஜித் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர்கள் சூர்யா, கார்த்தி அவரது தந்தை மறைவுக்கு ஆறுதல் கூறி இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னதாக, நடிகர் சிம்பு அஜித்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in