இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’ - படப்பிடிப்பு தொடக்கம்

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் ‘வாழை’ - படப்பிடிப்பு தொடக்கம்
Updated on
1 min read

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் புதிய படமான ‘வாழை’ படத்தின் படப்பிடிப்பை, நடிகர் உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் புதிய படம் ‘வாழை’. இதனை நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரிக்கிறார்.

டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. க்ளாப்போர்ட் அடித்து உதயநிதி ஸ்டாலின் தொடக்கி வைத்தார். மாரி செல்வராஜ் இயக்கும் நான்காவது படமான இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இருப்பினும் படம் சிறுவர்களை மையப்படுத்தி உருவாக உள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in