‘ரத்தசாட்சி’ ஆனது ஜெயமோகனின் ‘கைதிகள்’

‘ரத்தசாட்சி’ ஆனது ஜெயமோகனின் ‘கைதிகள்’
Updated on
1 min read

ஆஹா ஓடிடி தமிழ் மற்றும் மகிழ் மன்றம் இணைந்து தயாரித்துள்ள படத்துக்கு ‘ரத்தசாட்சி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘கைதிகள்’ சிறுகதையைத் தழுவி, இந்தப் படம் உருவாகியுள்ளது. ரஃபிக் இஸ்மாயில் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசை அமைத்துள்ளார். ஜெகதீஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஆயுதப் படைகளுக்குள் மனிதாபிமானம் இருக்கிறதா? இருவரின் வாழ்க்கையை அது எவ்வாறு பாதிக்கிறது? என்பதை இந்தப் படம் சொல்கிறது. கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர், மெட்ராஸ் சார்லஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். அனிதா மகேந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ஆஹா தளம் விரைவில் வெளியிடுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in