தினந்தோறும் நாகராஜின் அன்பைச் சொல்லும் படம்

தினந்தோறும் நாகராஜின் அன்பைச் சொல்லும் படம்
Updated on
1 min read

முரளி, சுவலட்சுமி நடித்து 1998ம் ஆண்டு வெளியான படம், ‘தினந்தோறும்’. இதை நாகராஜ் இயக்கி இருந்தார். பின்னர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘மின்னலே’, ‘காக்க காக்க’ படங்களுக்கு வசனம் எழுதிய நாகராஜ், 2013-ம் ஆண்டு ‘மத்தாப்பு’ என்ற படத்தை இயக்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கும் படத்தை க்யூ சினிமாஸ் சார்பில் சசிகுமார் ஆர் தயாரிக்கிறார். சத்யா இசை அமைக்கிறார். அசோக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

படம்பற்றி நாகராஜ் கூறும்போது, “இது, குட்டி என்ற ஒரு மனிதனின் வாழ்க்கையை பற்றிய படம். சென்னையை சுற்றிக் கதை நடக்கிறது. பெண்களுக்குப் பிடித்தப் படமாகவும் அன்பை சொல்லும் படமாகவும் இது இருக்கும். ஹீரோவாக நடிக்க, வளர்ந்து வரும் நாயகன் ஒருவரிடம் பேசி வருகிறோம். இளம் நாயகி ஒருவர் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். ஜனவரியில் ஷூட்டிங் தொடங்குகிறது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in