‘ரஜினி 169’ படத்தில் நெல்சனுடன் இணையும் கே.எஸ்.ரவிகுமார்

‘ரஜினி 169’ படத்தில் நெல்சனுடன் இணையும் கே.எஸ்.ரவிகுமார்
Updated on
1 min read

நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படத்தின் திரைக்கதையில் இயக்குநர் நெல்சனுடன் கே.எஸ்.ரவிக்குமார் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார் இயக்குநர் நெல்சன். 'சிறுத்தை' சிவாவின் 'அண்ணாத்த' படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'பீஸ்ட்' படத்தின் கலவையான விமர்சனங்களால், ரஜினி படத்திலிருந்து நெல்சன் மாற்றப்படுவதாக தகவல் வெளியானது. ஆனால், அந்தத் தகவல் மறுக்கப்பட்டது.

தற்போது, இந்தப் படத்தின் திரைக்கதை பணிகளில் நெல்சன் கவனம் செலுத்தி வருகிறார். 'டார்க் ஹுயூமர்' பாணியில் எடுக்கப்பட்ட தனது முந்தைய கதைகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால், 'ரஜினி 169' படத்தையும், அதே பாணியில் உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான திரைக்கதையின் இறுதி வடிவத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்து இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது. இந்த வருட இறுதிக்குள் படப்பிடிப்பு முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோர் 'ரஜினி 169' படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது, இருப்பினும், அதிகாரபூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in