“எல்லாரும் சமம்னா யாரு சார் ராஜா?” - ‘நெஞ்சுக்கு நீதி’யை புகழ்ந்த சென்னை மேயர் பிரியா

“எல்லாரும் சமம்னா யாரு சார் ராஜா?” - ‘நெஞ்சுக்கு நீதி’யை புகழ்ந்த சென்னை மேயர் பிரியா
Updated on
1 min read

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடத்த 'நெஞ்சுக்கு நீதி' படத்தைப் புகழ்ந்து சென்னை மாநகராட்சி மேயர் பிரியாக கருத்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடத்த 'நெஞ்சுக்கு நீதி' படம் கடந்த 20-ம் தேதி வெளியானது. வெளியானது முதல் தமிழக அமைச்சர் உட்பட பல திமுக நிர்வாகிகள் படத்தைப் பார்த்து கருத்து தெரிவித்து வருகிறன்றனர். இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் 'நெஞ்சுக்கு நீதி' படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "எல்லாரும் சமம்னா யாரு Sir ராஜா? / உதயநிதி ஸ்டாலின் அண்ணா நடப்பு மற்றும் அழுத்தமான திரைக்கதை ஆகியவற்றால் 'நெஞ்சுக்கு நீதி' நேர்த்தியான படமாக உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in