அக்டோபர் 3-ல் படப்பிடிப்பு; வில்லனாக சஞ்சய் தத்? - விஜய் 67 அப்டேட்

அக்டோபர் 3-ல் படப்பிடிப்பு; வில்லனாக சஞ்சய் தத்? - விஜய் 67 அப்டேட்
Updated on
1 min read

விஜய் 67-வது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 64 வது படமான 'மாஸ்டர்' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் பட்டாளமே நடித்திருந்தனர். கரோனா சூழலிலும் தியேட்டர்களில் வெளியான படங்களில் 'மாஸ்டர்' மட்டுமே வசூலைக் குவித்ததாக கூறப்பட்டது.

இதையடுத்து விஜய் நடித்த 65-வது படம் பீஸ்ட், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவானது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் பலரும் நடித்த இந்தப் படம் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து விஜயின் 66-வது படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் வம்சி. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். நடிகர் ஷ்யாமும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 67-வது படத்தை மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இதனை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டியோ நிறுவனம் தயாரிக்கிறது. இணை தயாரிப்பாளராக சேவியர் பிரிட்டோவும் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட 'மாஸ்டர்' கூட்டணி மீண்டும் கைகோத்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் மாதம் 3-ம் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ம் தேதி தான் தொடங்கியது.

விஜய் 67 படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ளதாகவும், படத்தின் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in