நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையரிடம் புகார்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது காவல் ஆணையரிடம் புகார்
Updated on
1 min read

சென்னை: சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். சமூக ஆர்வலரான இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘ஏகே 62’ என்ற படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதை உறுதிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளனர். விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் நெருங்கிய நட்பில் உள்ளனர். இவர்கள் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.

ரவுடிகளை ஒழிக்க தமிழக காவல்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருப்பது பொதுமக்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்வதோடு, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா ஆகியோரைக் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in