நட்சத்திர கிரிக்கெட்: நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ராதிகா அதிருப்தி

நட்சத்திர கிரிக்கெட்: நடிகர் சங்க நிர்வாகிகள் மீது ராதிகா அதிருப்தி
Updated on
1 min read

நட்சத்திர கிரிக்கெட் போட்டிக்கு தங்களை நிர்வாகிகள் அழைக்கவில்லை என்று ராதிகா சரத்குமார் தெரிவித்திருக்கிறார்.

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர். இதில் சரத்குமார் அணியில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில், இந்தக் கிரிக்கெட் போட்டிக்கு அழைக்கவில்லை என்று ராதிகா சரத்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து ராதிகா சரத்குமார் குறிப்பிடும்போது, "இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைத்திருந்தால் உங்களின் முதிர்ச்சியான அணுகுமுறையும், அனைவரிடமும் இணக்கமாக இருக்கும் தன்மையும் வெளிப்பட்டு இருக்கும்.

இதைவிட பெரிய நிகழ்ச்சிகளை நடிகர் சங்கத்திற்காகவும், நாட்டிற்காகவும் நடத்தியவர்கள் அவர்கள். அவர்களை அழைக்காததால் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு இருக்கிறது. (பி.கு) நீங்கள் என்னையும் அழைக்கவில்லை. சுவர் இல்லாமல் சித்திரம் இல்லை" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ராதிகா குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in